Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பாணம் கொடுத்து பாலியல் பலாத்காரம்

பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பாணம் கொடுத்து பாலியல் பலாத்காரம்
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (02:02 IST)
பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பாணம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டி (24), கட்டிடத் தொழிலாளி. இவர் சக தொழிலாளியின் மகளான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு பாண்டி குளிர்பானம் கொடுத்துள்ளார்.
 
அதனை குடித்த மாணவி அங்கேயே மயங்கி விட்டார். அதன் பின்னர் அவரை பாண்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண் விழித்த மாணவி தனது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அழுது கொண்டே பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டியை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரதட்சனை கொடுமை - 6 மாத கர்ப்பிணி காதலி தீக்குளித்து மரணம்