Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: சென்னையில் பெரும் பரபரப்பு

Advertiesment
1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: சென்னையில் பெரும் பரபரப்பு
, சனி, 17 நவம்பர் 2018 (13:56 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் நாய்க்கறி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
அதன்படி எழும்பூருக்கு வந்த அந்த ரயிலில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே சென்னையில் பல ஹோட்டல்களில் சிக்கன், மட்டனுக்கு பதிலாக நாய்க்கறி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
 
இந்நிலையில் தற்பொழுது நாய்க்கறி கைப்பற்றப்பட்டிருப்பது சென்னை வாசிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கறிகணேஷ் என்பவரது பெயருக்குத் தான் இந்த 1000 கிலோ நாய்க்கறி வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ரூபாய் கேட்ட போலீஸ்: கத்தியை காட்டிய இளைஞர்; அதிர்ந்துபோன காவலர்கள்