Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை – எங்கெங்கு தெரியுமா?

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை – எங்கெங்கு தெரியுமா?
, வியாழன், 1 டிசம்பர் 2022 (10:36 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 291 பேர் பாதிப்பு; இருவர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!