Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 10 மாவட்டங்களில் கனமழை… எங்கெங்கு தெரியுமா?

Advertiesment
தமிழகம்
, சனி, 1 அக்டோபர் 2022 (14:12 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆம், தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்கெட் கேட்ட மூதாட்டி சாட்சியாக சேர்ப்பு என திமுக நிர்வாகி தகவல் !