Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

Mahendran
சனி, 12 ஏப்ரல் 2025 (10:46 IST)
தமிழக ஆளுநர் தாமதம் செய்ததாகக் கூறப்பட்ட 10 மசோதாக்கள், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து சட்டமாக அறிவிக்கப்பட்டு, தமிழக அரசிதழில் இன்று வெளியிடப்பட்டன.
 
2020-ஆம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலின்றி நிலுவையில் இருந்ததாக, தமிழக அரசு கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 
 
இதில் கடந்த 8ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆளுநர் நிர்வாகத் தாமதம் சட்ட விரோதமானது என்றும், ஒப்புதல் அளிக்காமல் இருந்தாலும், ஒரு மாதத்துக்குள் முடிவு இல்லை என்றால், அந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவே கருதப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், பல்கலைக்கழக சட்ட திருத்தம்  உள்ளிட்ட 10 முக்கிய மசோதாக்கள் சட்டமாக கணிக்கப்பட்டு, தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநரால் மறுக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத் திருத்த மசோதா, மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் 07.03.2024 அன்று சட்டமாக நடைமுறைக்கு வந்தது. இது, ஆளுநர் அதிகார வரம்பு குறித்து தீர்க்கமான வழிகாட்டுதலாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments