Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (14:31 IST)
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கை சட்டமன்றக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,538 டன் அரிசி வீணானது கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த 2022-ஆம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட இந்த அரிசி, மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டதை பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர்.
 
இதையடுத்து, வீணான அரிசியை கால்நடை தீவனமாகப் பயன்படுத்தலாம் என சட்டமன்றக் குழுவினர் பரிந்துரைத்தனர். மேலும், உரிய காலத்தில் மக்களுக்கு விநியோகம் செய்யாமல் அரிசியின் தரம் குறைய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். 
 
இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என குழுவின் தலைவர், எம்.எல்.ஏ. நந்தகுமார் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments