Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தஞ்சை மண்டல வைணவ நவகிரக தலங்கள்: ஓர் ஆன்மிக பார்வை..!

Advertiesment
தஞ்சாவூர்

Mahendran

, வியாழன், 31 ஜூலை 2025 (19:06 IST)
தஞ்சாவூர் சுற்றியுள்ள வைணவ நவகிரக தலங்களில் உரிய வழிபாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், இந்த ஒன்பது பெருமாள் கோவில்கள் பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்று வருகின்றன. இத்தலங்களில் கிரகங்களுக்கென தனி சன்னதிகள் இல்லை; மாறாக, பெருமாளே நவகிரக அம்சங்களுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார்.
 
இந்த ஒன்பது தலங்கள்: கும்பகோணத்தில் சூரியனுக்குரிய ஸ்ரீசாரங்கபாணி, திருநாங்கூர் சந்திரனுக்குரிய ஜெகன்னாதர் (ஸ்ரீநாதன்கோவில்), நாச்சியார்கோவில் செவ்வாய்க்குரிய சீனிவாச பெருமாள் (திருநறையூர்), திருப்புள்ளம்பூதங்குடி புதனுக்குரிய வல்வில் ராமர், திருஆதனூர் வியாழனுக்குரிய ஆண்டளக்கும் அய்யன்பெருமாள், திருவெள்ளியங்குடி சுக்கிரனுக்குரிய கோலவல்வில்ராமர், உப்பிலியப்பன்கோவில் சனிக்குரிய ஒப்பிலியப்பன் பெருமாள் (திருவிண்ணகர்), கபிஸ்தலம் ராகுவுக்குரிய கஜேந்திர வரதர், மற்றும் திருக்கூடலூர் கேதுவுக்குரிய ஜெகத்ரட்சகன் (மாந்திக்கு திருச்சேறை).
 
பெருமாள் கோவில்களில் நவகிரகங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதல்ல; இங்கேயும் நவகிரக பூஜைகள், ஹோமங்கள் போன்றவை நடைபெறுகின்றன. பெருமாளே அனைத்துக் கிரக தோஷங்களையும் நீக்கும் சக்தி கொண்டவர் என்பதை இத்தலங்கள் உணர்த்துகின்றன. இந்தத் தலங்களின் மறுமலர்ச்சி, பக்தர்களுக்குப் புதிய ஆன்மிக அனுபவத்தை அளித்து, தஞ்சை மண்டலத்தின் ஆன்மிகப் பெருமையைப் பறைசாற்றுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மீனம்