Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீரும் தடுப்பூசி தட்டுப்பாடு... நாளை வந்திறங்கும் கோவாக்சின்!

தீரும் தடுப்பூசி தட்டுப்பாடு... நாளை வந்திறங்கும் கோவாக்சின்!
, செவ்வாய், 8 ஜூன் 2021 (11:52 IST)
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் அரசே முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தி வரும் நிலையில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.  
 
இந்நிலையில், தமிழகத்துக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 1,03,370 கோவாக்சின் தடுப்பூசி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதானவர்களுக்கு செலுத்துவதற்காக நாளை 63,370 கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகிறது. 44 வயதானவர்களுக்கு செலுத்துவதற்காக 40,000 கோவாக்சின் தடுப்பூசி நாளை மறுநாள் வர உள்ளதாக கூறப்படுகிறது.
 
அதாவது, ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் உடலில் 32 வகை கொரோனா: அதிர்ச்சி தகவல்!