Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 % உயர்வு- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

Advertiesment
கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 % உயர்வு- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (15:09 IST)
கடன்களுக்கான வட்டி விகிதத்தில்  0.5 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த   நிலையில்,   மும்பையில் இன்று நடந்த ஆலைசனைக் கூட்டத்தில், ரிசர் வங்கி ஆளு நர் சக்தி காந்த தாட்ஸ் தலைமை வகித்தார்.


அப்போது, பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வட்டி விகிததம் 5.40 ஆக இருந்த நிலையில், தற்போது அதைக் காட்டிலும் (0.5%)அதிகரித்துள்ளது.  கடந்த 5 மாதங்களில் 1.4 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. 

இதனால், வீட்டுக்கடம், கல்விக்கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி அதிகரிக்கும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து 4 வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்-டிடிவி. தினகரன் டிவீட்