Publish Date: Fri, 30 Sep 2022 (08:13 IST)
Updated Date: Fri, 30 Sep 2022 (08:55 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக டி 20 உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் இன்னும் 6 மாத காலத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில்தான் அவர் மீண்டும் விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.