Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் இன்று முதல் அபராதம்.. வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

Siva
வியாழன், 2 மே 2024 (07:14 IST)
சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்  ஒட்டியிருந்தால்  இன்று முதல் அபராதம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் இருந்தால் அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
முதல் முறை ரூ.500, 2வது முறை ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை  போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் நம்பர் பிளேட்டில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்ற ஏற்கனவே போலீஸ் அறிவுறுத்திய  நிலையில் இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வாகனங்களில் நம்பர் பிளேட்டை தவிர வேறு ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எனவே வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் ஆகியவை எதுவும் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments