திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர்கள் வழக்கு தொடர உரிமையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:58 IST)
திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் என்ற முறையில் வாழும் தம்பதிகள் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோவையைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஜோசப் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாகவும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதை அடுத்து தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழும் தம்பதிகள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர அனுமதி இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்
 
அதுமட்டுமின்றி கலைச்செல்வி கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் காரணமாகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments