Publish Date: Wed, 28 Dec 2022 (20:47 IST)
Updated Date: Wed, 28 Dec 2022 (20:49 IST)
இந்தியாவிலுள்ள பலருக்கு மூலநோய் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது நீண்டதூரம் பயணம் செய்வது ஆகியவை காரணமாகத்தான் மூல நோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இரவில் நீண்ட நேரம் கண் விழிக்காமல் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
மூல நோய் மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகள் காரணமாகவும் மலச்சிக்கல் உண்டாகும் என்றும் எனவே மலச்சிக்கலை தீர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழங்கள் கீரைகள் காய்கறிகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக கொய்யாப்பழம் பழம், மாதுளம்பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
காரம் அதிகமாக சாப்பிடக் கூடாது என்றும் ஒரே நேரத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.