Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராட்சை பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் என்ன பலன்கள்...?

திராட்சை பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் என்ன பலன்கள்...?
திராட்சை பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு அதிக அளவில் சேராமல் பாதுகாக்கிறது.

பொட்டாசியம் சத்து இதில் அதிக அளவில் உள்ளது. எனவே இந்த பொட்டாசியம் உடலில் ஓடுகின்ற ரத்த அழுத்தத்தினை சீராக்குகிறது. மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
 
திராட்சைப்பழம் கண்களின் கரு விழிகளில் உள்ள செல்கள் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே கண் பார்வை தெளிவாகும். மேலும் இது கண் அழுத்தம் சம்பந்தமான நோய்கள் கண்களில் புரை ஏற்படுவது போன்றவற்றை போக்குகிறது.
 
நமது உடல் சோர்வடையும் போதும், சூழ்நிலை காரணமாக பதற்றமடையும்போதும் உடல் நலத்தை பாதிக்கக்கூடிய ஒரு சில ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகின்றது. அச்சமயங்களில் மன அழுத்தம் ஏற்படுகின்றது. திராட்சைப்பழம் இந்த கெட்ட ரசாயனத்தை கட்டுப்படுத்துகிறது.
 
தொற்று நோயினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். நுண் கிருமிகள் வைரஸ் பாக்டீரியா போன்றவற்றை அழிக்கும் திறன் திராட்சைப் பழத்துக்கு உள்ளது. எனவே தினம்தோறும் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
திராட்சைபழத்தினை அப்படியே சாப்பிடுவதாலும் மற்றும் இதனை நன்கு காயவைத்து உலர்திராட்சையாக சாப்பிடுவதாலும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
 
நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகம் உதவுகிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் நலத்துடன் இருக்க முடியும்.
 
தினமும் சிறிதளவு திராட்சை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் எளிதில் வராது. சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமழும் தடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடியை பராமரிக்க உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !!