Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல வியாதிகளுக்கு சிறந்த மருத்தாகும் வில்வம் !!

பல வியாதிகளுக்கு சிறந்த மருத்தாகும் வில்வம் !!
, சனி, 1 ஜனவரி 2022 (16:48 IST)
வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும். வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்.

வில்வம் தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. 
 
வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும். வில்வ மரத்தின் இலைகள், கொட்டைகள், பட்டை, பூக்கள் , பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை.
 
சிவனுக்கு ஒரு வில்வம் சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாத்தினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இலைகள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம். வில்வம் பக்தியையும், முக்தியையும் அளிக்கக்கூடியதாகும்.
 
வில்வப்பழம் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. வில்வப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
 
வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. 
 
எல்லா விதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேன் தொல்லையை முற்றிலும் நீக்க உதவும் குறிப்புகள் !!