Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முழு தாவரமும் மருத்துவகுணம் நிறைந்து காணப்படும் நொச்சி இலை !!

முழு தாவரமும் மருத்துவகுணம் நிறைந்து காணப்படும் நொச்சி இலை !!
நொச்சி இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. மேலும் இவை சிறந்த மருத்துவ பயன்கள் கொண்டது. 

வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. 
 
தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. நொச்சி, சிறு மரவகையைச் சேர்ந்த தாவரம். கருநொச்சி அதிக  மருத்துவகுணம் வாய்ந்தது. 
 
நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். நொச்சி  லையை அரைத்து மண்ணீரல் வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம். 
 
காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற  வல்லது. 
 
மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை  நீக்கும். 
 
நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு  தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. அதுமட்டுமல்ல கொசு விரட்டுவதில் முக்கியப் பங்கு இந்த நொச்சிக்கு உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகத்துவம் நிறைந்த மாதுளம் பூவின் மருத்துவ குணங்கள் !!