Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முழு செடியும் அற்புத மருத்துவ குணம் கொண்ட கண்டங்கத்தரி !!

முழு செடியும் அற்புத மருத்துவ குணம் கொண்ட கண்டங்கத்தரி !!
கண்டங்கத்தரி இரத்த அழுத்தத்தை சரிசெய்யக் கூடியது. கண்டங்கத்தரியின் முழு செடியயையும் பிடுங்கி காயவைத்து பொடியாக்கி ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்க குணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வறட்டு இருமல், சளித்தொல்லை, வியர்வை நாற்றம், கீல்வாதம் போன்றவற்றிக்கு ஓரு சிறந்த மூலிகையாகும். 

பாதவெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும். உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகலாம். 
 
கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து நைத்து சாறு எடுத்து, அதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு நீங்கும்.
 
கண்டங்கத்தரியை காயவைத்து சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளி வெளியேறும்.நல்ல பசி உண்டாகும்.சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாட்பட்ட இருமலுக்கு இந்த கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேவையான அளவு தேன் சேர்த்து இருவேளை கொடுக்க இருமல் சரியாகும்.
 
கண்டங்கத்தரி வேர் , ஆடாதொடை வேர் இரண்டையும் 40 கிராம்  அளவு எடுத்து அரிசி திப்பலி 5 கிராம் சேர்த்து லேசாக தட்டி 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 500 மி.லி வற்றவைத்து இறக்கி 100 மி.லி அளவு எடுத்து 5 வேளை குடிக்க ஆஸ்துமா  , இரைப்பிருமல் , கபநோய் , பீனிசம் சரியாகும்.சளிதொல்லை நீங்கும். 
 
கண்டங்கத்தரி பூ 100 கிராம் அளவு எடுத்து காயவைத்து அதனுடன் சீரகம் , திப்பலி , நெல்லிமுல்லி  ஆகியவற்றை சேர்த்து பொடியாக்கி 2 கிராம் அளவு எடுத்து 48 நாட்கள் பாலில் கலந்து உண்டுவர கண்பார்வை கூர்மை பெறும்.
 
கண்டங்கத்தரி இலைச் சாறு, வாத நாராயண இலைச் சாறு , முடக்கத்தான் இலைச் சாறு இவற்றை வகைக்கு 100 மி.லி அளவு சாறு எடுத்து 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி 50 கிராம் பச்சைகற்பூரம் பொடிசெய்து இந்த எண்ணெய்யுடன் சேர்த்து மூட்டுவலிக்கு ஓத்தடம் கொடுக்க மூட்டுவலி குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூலிகைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும் !!