Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவில் சர்க்கரையை அதிகம் சேர்க்கப்படுவதால் உண்டாகும் பாதிப்புகள்...!!

உணவில் சர்க்கரையை அதிகம் சேர்க்கப்படுவதால் உண்டாகும் பாதிப்புகள்...!!
சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்திலாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
அதிக சர்க்கரை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி சர்க்கரை நோய் வருகிறது. சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு  உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. 
 
டின் பானங்கள் செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கீரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக  மாற்றுகிறீர்கள்.
 
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு  பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.
 
உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும்  இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான பொரோஸ்டேகிளேண்டின் E2க்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது  புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
 
ரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரை ரத்தக்குழாய் சுவர்களைத் தடிக்கச் செய்யும். இதயத்துக்கு அதிக அழுத்தம் உண்டாகும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வரும். அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு  உண்டாக்குகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெங்கு காய்ச்சல் எப்படி எவ்வாறு பரவுகிறது தெரியுமா...?