Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!
உடல் எடையை குறைக்க பலரும் பல் செயல்களைப் பின்பற்றி, உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த எளிய வகை மருத்துவம் மூலம் பயன்பெறலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை  அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
 
சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும்  செய்கின்றது.
 
நீண்ட நாட்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக் கூட, பசி உணர்வை சோம்புத் தூண்டுகின்றது. கடினமான உணவு வகைகளையும் அலட்டல்  இல்லாமல் செரிக்கவைக்கும் குணம் இதற்கு உண்டு.
 
சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.
 
சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களைக் குறைத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு  வருகிறது.
 
சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
 
சோம்பு தண்ணீர் குடித்தால் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரைந்து, தொப்பை குறைந்து சரியான உடல் அமைப்பை தரும்.
 
சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறைந்தது கொரோனா: ஆரஞ்சு மண்டலமாக மாறும் மாவட்டங்கள்!