Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருதாணியை மருந்தாக எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்...!

மருதாணியை மருந்தாக எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்...!
மருதாணியை அரைத்து உள்ளங்கை, கால்களில் பூசினால் பித்தம் தணியும். உடலில் உள்ள உஷ்ணம் குறையும். வெயில் காலத்தில் வாரம் ஒருமுறையாவது மருதாணி வைத்துக் கொண்டால் நன்மை கிடைக்கும்.
மருதாணியை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மருதாணி இலைகள், பனங்கற்கண்டு, பால்,  ஒரு பிடி மருதானி இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க  வைக்கவேண்டும். இதை வடிகட்டி பால் சேர்த்து குடித்துவர உள் உறுப்புகளின் உஷ்ணம் தணியும். வயிறு, நெஞ்சு எரிச்ச; சரியாகும். இது வெள்ளைப்படுதலுக்கு மருந்தாலிறது, உடல் எரிச்சல் குணமாகும்.
 
மருதாணி என்பது அழகு சேர்ப்பது மட்டுமல்ல. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன, மருதாணி நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை  கொண்டது.
webdunia
மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத்  தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.
 
6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள்  வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதாக கிடைக்கும் பாகற்காய் எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா...?