Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குங்குமப்பூ அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா..?

Saffron
, வெள்ளி, 31 மார்ச் 2023 (08:53 IST)
விலை அதிகமாகவும் மிக அரிதாகவும் கிடைக்ககூடிய குங்குமப்பூவை பலரும் உட்கொள்கின்றனர். ஆனால் குங்குமப்பூவும் அதிகம் சாப்பிடும்போது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  • கர்ப்பிணி பெண்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பிறக்க குங்கும பூ சாப்பிடுகின்றனர்.
  • குங்கும பூவை காய்ச்சிய பாலில் 5 கிராம் அளவு மட்டுமே போட்டு குடிக்க வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் குங்கும பூ அதிகம் எடுத்துக் கொண்டால் 5 மாதத்திற்கு பின்னும் வாந்தி, தலை சுற்றல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • குங்கும பூவை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது பசி எடுப்பது குறைவதுடன், செரிமான பிரச்சினை ஏற்படும்.
  • அதிகமான குங்கும பூவை சாப்பிடும்போது ஆசன வாயில் ரத்தம் வெளியேறுதல், மூக்கில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை ஏற்படலாம்.
  • குங்கும பூவை அதிகம் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும்.
  • தினசரி 5 கிராம் அளவிற்கு மேல் குங்கும பூ எடுக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேர்க்கடலை சாப்பிட்டால் இதய நோய் வராதா?