Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழத்தின் பயன்களை அறிவோம்...!

Advertiesment
மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழத்தின் பயன்களை அறிவோம்...!
அத்திப்பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு,  நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. 
அத்திப்பழம் உனவை சீரணிக்க செய்து சுறுசுறுப்பைத் தந்து, பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை நீக்குகிறது. அத்திப் பழத்தைத் உண்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலை முடியும் நீளமாக வளர்கிறது.
 
அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
 
போதை பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் ஒருவாரம் வரை ஊறவைத்து அதனைத்  தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
 
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப்  பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
webdunia
அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
 
உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்சியம்  சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு தெரியுமா?; உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் நாட்டுச் சர்க்கரை...!