நாள்பட்ட சளியை விரட்டும் அற்புத மருத்துவ குறிப்புகள்!!

Webdunia
நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்சினையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம்.
10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்.
 
சளி பிரச்சினைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை  போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
 
வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து தயாரிக்கலாம். வெள்ளெருக்கம் பூவின்  இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற  அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு  கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும். ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக  வெள்ளெருக்கம் பூ விளங்குகிறது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை தீரும்.
 
கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேநீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல்,  உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் போகும். இந்த தேநீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமில்லை: மருத்துவர்களின் எச்சரிக்கை

மார்பக சீரமைப்பு தினத்தில் (BRA Day 2025) மார்பகப் புற்றுநோயை வென்ற 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்த சென்னை மார்பக மையம்

பற்களை பாதுகாக்க எளிய வழிகள்: நீண்ட கால ஆரோக்கியத்திற்கான கையேடு

பப்பாளியின் அரிய மருத்துவப் பயன்கள்: செரிமானம் முதல் புற்றுநோய் வரை!

அடுத்த கட்டுரையில்
Show comments