Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடலை நோயிலிருந்து காக்கும் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்!!

உடலை நோயிலிருந்து காக்கும் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்!!
மஞ்சளின் மருத்துவ குணம் நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. 
இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன் மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும்.
webdunia
முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்”சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள்  போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 
 
நோய் தீர்க்கும் அருமருந்து மஞ்சள். வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும். உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள்  பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும். 
 
ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு. உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது. மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழை இலையில் தொடர்ந்து உணவருந்துவதால் கிடைக்கும் பயன்கள்!!