Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ள வாழைப்பூ!!

மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ள வாழைப்பூ!!
வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும் தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.
வயிற்றில் ஏற்படும் செரியாமை, வாயு சீற்றம், புண்கள் ஆகியவற்றை ஆற்றும் வல்லமை, வாழைப் பூவுக்கு உண்டு. மேலும் செரிமானத்  தன்மையை அதிகரிக்கும்.
 
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் குணம்  கிடைக்கும்.
webdunia
ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.
 
மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கும்.
 
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா....?