Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் அன்னாசிப்பழம் !!

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் அன்னாசிப்பழம் !!
, புதன், 29 டிசம்பர் 2021 (08:49 IST)
ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னசிபழத்தின் சாறு ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது. அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

அன்னாசிபழத்தில் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் அதிக அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
 
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது மூட்டு பகுதியில் உண்டாகும் தேய்மானத்தை கட்டுபடுத்தி வலியினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது.
 
அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும் உங்களின் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.
 
அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. மேலும் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
 
உயர் இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கு அன்னாசிபழம் பெரிதும் பயன்படுகிறது. அன்னாசிபழதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்த மருத்துவத்தில் அற்புத பலன் தரும் மூலிகை அவுரி !!