Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பனங்கற்கண்டு !!

உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பனங்கற்கண்டு !!
, செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:23 IST)
கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

பனங்கற்கண்டு வாத பித்தத்தை நீக்கி பசியை தூண்டுகிறது. முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள்.
 
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண் அகலும்.
 
பனங்கற்கண்டை தினமும் சாப்பிட்டு வந்தால்  உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் குறையும்.
 
பனங்கற்கண்டு அதிகம் சாப்பிடுவதாலும் பானங்களில் பனங்கற்கண்டுகளைக் கலந்து அருந்துவதாலும் உடல் வெப்பம் மற்றும் உஷ்ண வியாதிகள் அனைத்தையும் நீக்கமுடியும்.
 
பனங்கற்கண்டில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
 
பனங்கற்கண்டில் இருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உட்பட அனைத்து சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தை மென்மையாகவும் அழகாகவும் மாற்ற வேண்டுமா...?