Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகத்தை மென்மையாகவும் அழகாகவும் மாற்ற வேண்டுமா...?

முகத்தை மென்மையாகவும் அழகாகவும் மாற்ற வேண்டுமா...?
, செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:47 IST)
பேக்கிங் சோடாவை நீர் விட்டு பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வருவதால் உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

கற்றாழை ஜெல்லை கொண்டு முகத்தை தினமும் 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் எந்த ஒரு மாசு மருக்களும் இல்லாமல் முகம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.
 
ஓட்ஸ் முகத்திற்கு மிகவும் சிறந்த ஒரு பொருளாகும். ஓட்ஸை தூள் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து, முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
 
தயிர் மற்றும் எலுமிச்சை இரண்டுமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
 
தக்காளியை பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, முகம் பளிச்சென மாறும்.
 
மாம்பழ தோல் முகத்திற்கு மிகவும் நல்லது. இந்த மாம்பழ தோலை நன்றாக அரைத்து பால் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பாக மாறும். நிறம் கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமையலறை பொருட்களை வைத்தே முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க குறிப்புக்கள் !!