Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்த்துமா, நுரையீரல் பிரச்சனைக்கு மூன்று நாட்களில் சுத்தம் செய்ய....

ஆஸ்த்துமா, நுரையீரல் பிரச்சனைக்கு மூன்று நாட்களில் சுத்தம் செய்ய....
புகை பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி  ஏற்படுவதுண்டு. அதே சமயம் பல வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக  இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.

 
நுரையீரல் சுத்தம் செய்ய...
 
இதை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். சுத்தம்  செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற  உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய  வேண்டாம்.
 
முதல் நாள்: இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.
 
ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப் (புரூட் சாறு) குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால்  கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக  இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது  நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.
 
மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது.  கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.
 
இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல்  குடிக்கலாம். இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது  20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும். அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம்.  வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.
 
இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை  சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை  ஆவி பிடிக்கவும்.
 
மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல  முறையில் பலனை பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோபால்தாசனின் நீயும் நானும்- புத்தக விமர்சனம்