Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதினாவில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்!!

புதினாவில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்!!
இயற்கை நமக்கு அளித்த எண்ணற்ற கொடைகளில் ஒன்று தான் புதினா.புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின்  ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. 
புதினா சாதத்தை வாரத்தில் மூன்று முறை சேர்த்து கொண்டால் உடலில் அரிப்புகள் வருவது தடுக்கப்படுவது மட்டுமின்றி ஆரோக்கியதுடன்  இருக்க முடியும்.
 
அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், மலச்சிக்கல் நீங்கும், பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
 
புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை  குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.
 
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
 
புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும்.
 
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேனுடன் எந்த பொருட்களை கலந்து சாப்பிடுவதால் என்ன பலன்கள் !!