Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றை தலைவலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!

Webdunia
உங்களுக்கு ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால், அந்த நோய் ஏற்படுவதன் காரணத்தை கண்டறிவதன் மூலம், ஒற்றை தலைவலி நோயை நாம் குணப்படுத்தலாம்.
உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்துவது, சரியான நேரத்திற்கு உட்கொள்ளாமல் இருப்பது, உடலில் நீர் அளவு குறைவாக இருப்பது, மது அருந்துவது, காபி, டீ, சாக்லேட் மற்றும் பால் கட்டி போன்ற உணவுகள் காரணமாக ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.
 
மன அழுத்தம், கோபம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி போன்ற மனவியல் காரணமாக ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.
 
களைப்பு, தூக்கமின்மை, அதிக நேர பயணம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளினாலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.
 
பிரகாசமான ஒளி, புகைத்தல், அதிக சத்தம், காலநிலை மாற்றங்கள், தூய காற்றின்மை மற்றும் மருந்துகள் போன்ற காரணமாக ஒற்றை  தலைவலி ஏற்படுகிறது.
 
ஒற்றை தலைவலியை மாத்திரையால் குணப்படுத்த முடியும், ஆனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி மாத்திரையை பயன்படுத்தகூடாது.
 
தலைவலி ஏற்பட்டால் அமைதியான இடத்தில் ஓய்வெடுங்கள், சத்தம் இல்லாத அல்லது இருட்டான அறையில் முடிந்தளவு சிறிது நேரம்  தூங்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments