Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களை போக்கும் நல்மருந்தாகும் கோரைக்கிழங்கு !!

பல்வேறு நோய்களை போக்கும் நல்மருந்தாகும் கோரைக்கிழங்கு !!
கோரை கிழங்கு பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது. மேலும் வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. மேலும் முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும். வியர்வை நாற்றத்தை போக்குகிறது.
 
கோரை கிழங்கு 5 கிராம் வரை எடுத்து இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவேண்டும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் தணியும்.
 
கோரை கிழங்கு பல்வேறு நோய்களை போக்கும் நல்மருந்தாக விளங்குகிறது. கோரை கிழங்குடன் ஊறவைத்த வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவேண்டும். இதை வடிக்கட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர் எரிச்சலோடு வெளிவருதல்,  சிறுநீரோடு ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை கோரை கிழங்கு சரி செய்கிறது.
 
உடல் வலியை போக்கும் கோரை கிழங்கு தைலங்களில் மணத்துக்காக சேர்க்கப்படுகிறது. ரத்தவட்ட அணுக்களை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. காயவைத்த கோரை கிழங்கு, பொடி ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மேலும் நீர்பாங்கான இடங்களில் கோரைக்கிழங்கு எளிதாக கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்திக்காய் பருப்பு கூட்டு செய்ய வேண்டும்...?