Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிக்கடி பீர்க்கன் காயை சமையலில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்...!!

அடிக்கடி பீர்க்கன் காயை சமையலில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்...!!
நார்ச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இதிலுள்ள நார்ச்சத்து உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக் கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில்  உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.
 
பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து, சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய்  கட்டுப்படும்.
 
சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை  சூடுபடுத்தக்கூடாது.
 
பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு  எண்ணெய்யாகவும் திகழ்கிறது.
 
இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே  இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால்  குறையும்.
 
மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை  தேய்த்து உதவ பயன்படுகிறது.
 
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்வது உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ பயன்கள் அதிகம் நிறைந்த நாயுருவி இலை...!