Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோலில் கருமை நிறம் படிவதால் உண்டாகும் பாதிப்பை சரிசெய்ய சில குறிப்புக்கள் !!

தோலில் கருமை நிறம் படிவதால் உண்டாகும் பாதிப்பை சரிசெய்ய சில குறிப்புக்கள் !!
, சனி, 15 ஜனவரி 2022 (18:12 IST)
வெயிலில் அதிக நேரம் செல்வதால் தோல் கருமையாகிறது. தூசுகள் வியர்வையில் படிவதால் தோல் கருமை நிறம் ஆகிறது. தோலில் சுருக்கம், கண்களில் கருவளையம் ஏற்படுகிறது.


சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தி தோல் சுருக்கம், கருமை நிறத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். சோற்றுக் கற்றாழையில் உள்ளிருக்கும் சதையில் இருந்து சாறு எடுத்து தோல் சுருக்கம் உள்ள இடத்தில் பூசுவதால் சுருக்கம், கருமை நிறம் மாறும். சோற்றுக் கற்றாழை முதுமையை போக்கும் உன்னதமான மருந்தாகிறது.

பூஞ்சை காளான்களை போக்க கூடியது, கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பலம் தரக்கூடியது. ஊட்டசத்துக்களை உள்ளடக்கியது. குளிர்ச்சி தரக்கூடியது. தோலில் ஏற்படும் புற்றை போக்க கூடியது.

ஆவாரம் பூ பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். தோலில் சுமார் 15 நிமிடங்களில் பூசி வைத்திருந்தால் தோல் சுருக்கம், கருமை நிறம் மாறி பழைய நிலைக்கு வரும். ஆவாரம் பூவை தேனீராக்கி குடிப்பதன் மூலம் தோல் ஆரோக்கியம் பெறும். ஆவாரம் பூ ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். வியர்வை நாற்றத்தை போக்கும்.

சிறிது அதிமதுர பொடியுடன், தக்காளி பசை சேர்த்து நன்றாக கலந்து பூசிவர தோல் சுருக்கம், கருமைநிறம் மாறும். தக்காளி வைட்டமின் சி சத்து கொண்டது. மருந்துவ குணங்களை கொண்ட இது புத்துணர்வு தரக்கூடியது. முதுமையை போக்கும் தன்மை கொண்டது. தோல் ஆரோக்கியம் பெறுகிறது.

உருளைக் கிழங்கை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். உருளைக் கிழங்கை சுத்தப்படுத்தி பச்சையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் தேன் சேர்த்து கலந்து பூசி வர சுருக்கம், கருமை நிறம் மாறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதான முறையில் சுவையான மெதுவடை செய்ய !!