Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரத்த சோகையை போக்கும் உலர்ந்த கருப்பு திராட்சை !!

இரத்த சோகையை போக்கும்  உலர்ந்த கருப்பு திராட்சை !!
கடுமையான இரத்த சோகையால் அவதிப்படுபவர்களும் உலர்ந்த கருப்பு திராட்சையால் பெரிதும் பயனடைவார்கள். இந்த பழங்களின் இரும்பு உள்ளடக்கம் பல இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை விட அதிகமாக இருப்பதாக அறியப்படுகிறது.


கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. மாறாக, இது நம் உடலில் காணப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதங்களின் (எல்.டி.எல்) அல்லது ‘கெட்ட’ கொழுப்பின் மோசமான விளைவுகளைத் தடுக்க உதவுகிறது.

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொழுப்புகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்குகாற்றும் முளை கட்டிய தானியங்கள் !!