Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் நெல்லிக்காய்...!!

நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் நெல்லிக்காய்...!!
நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. இந்த நெல்லிக்காயில் உள்ள சாறு சற்று துவர்ப்புடன்  இருக்கும்.

நீரழிவு நோயாளிகள் 2 மேஜைக்கரண்டி நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஆஸ்துமா நோயும் குணமாகிவிடும்.
 
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையானது  படிப்படியாக குறையும்.
 
நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடிக்கும்போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
இந்த மலை நெல்லிக்காய் சாறு குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே தினமும் இதனை குடித்து வந்தால் மலசிக்கல் பிரச்சினை சரியாகி விடும்.
 
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலை போக்குவதற்காக தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.
 
கோடை காலத்தில் நமது உடலானது எப்போதுமே அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு உதவுவதற்காக.. என் அம்மா என்னை விட்டு விலகியிருக்கிறார் ! சிறுவன் உருக்கம் !