Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரோக்கியம் தரும் சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

ஆரோக்கியம் தரும் சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்...!
சாறு பிழிந்த எலுமிச்சை பழத் தோலைத் தூக்கி எறிந்துவிடாமல், உருளைகிழங்கு, வேகவைக்கும்போது அதோடு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.
முருங்கைக் கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைக்க ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.
 
சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன்படுத்தி வர  மார்புச்சளி, ஆச்துமா, காச நோய் தீருவதுடன் வயிற்றுப் போக்கு நின்று விடும்.
 
கீரையை வேகவிடும்போது, சிறிது எண்ணெய் அதனுடன் சேர்த்து வேகவைத்தால், கீரை பசுமையாக, ருசியாக இருக்கும்.
 
வாழைப்பூவை நறுக்கிச் சுத்தம் செய்வதே பெரிய வேலை. இதோ ஓர் எளிய முறை. பூவை ஆய்ந்ததும் முழுசாக மிக்ஸியில் போட்டு இரண்டே சுற்று சுற்றினால் போதும். ஒரே அளவில் பூவாக உதிரும்.
 
துளசி இலைச்சாற்றில் மாசிக்காயை நன்கு இழைத்து அந்த விழுதை இருவேளை சாப்பிட்டு வர வயிற்று புண் & வலி குணமாகும்.
 
வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது, அதனுடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்துக் செய்தால், சுவையும் மணமும்  மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது.
 
படிகார தூளை காலை வெறும் வயிற்றில் தூயநீரில் சேர்த்து பருகி வர கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.
 
வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறைத்  தெளிக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்தான மீன் சூப் எப்படி செய்வது...?