Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடல்புண் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும் நெய் !!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:56 IST)
நெய்யில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. அதோடு விட்டமின் ஏ, டி. இ. கே என்ற விட்டமின்களும் அடங்கி உள்ளது.


வெதுவெதுப்பான தண்ணீரில் நெய்யை ஊற்றி குடித்து வந்தால், உடலில் இருக்கும் வெள்ளை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால், நோய் நம்மை எளிதில் தாக்கிவிடாது.

நெய் மற்றும் மஞ்சளை வெந்நீரில் போட்டு குடித்து வந்தால், வரட்டு இருமல் குணமடைந்துவிடும். நெய் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கும் தன்மை கொண்டது.

இரத்தகுழாயில் அதிக கொழுப்பு படியாமல் பாதுகாக்கவும், இரத்தகட்டிகள் உருவாகாமல் தடுக்கவும், அதோடு பற்சொத்தை, பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தவும் நெய்யில் உள்ள விட்டமின் கே மற்றும் கே2 உதவுகின்றது

காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடுவது, உடலுக்கு வலுவை தரும். மேலும், எலும்பின் மூட்டுகளும் நல்ல ஸ்டராங்காக மாறும். தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக நெய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும். தலைமுடி உதிர்வு நெய்யை ஒருவர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments