Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எளிதாக கிடைக்கும் முடகத்தான் கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?

எளிதாக கிடைக்கும் முடகத்தான் கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?
முடக்கதான் கீரையை பயன்படுவதால், நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலிமை பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலியை சரிசெய்வதில் ஓரு சிறந்த மூலிகை இது. மேலும் வாயு தொல்லையை நீக்கி, மலசிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது. 

கண் சம்மந்தமான பிரச்சனையை சரிசெய்ய கூடியது. மேலும் முடக்கு வாத சம்மந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்யக் கூடியது. குடலிறக்க நோய்களையும் சரிசெய்யக் கூடியது.மாதவிடாய் பிரச்சனைகளையும் சரிசெய்யக் கூடியது.
 
முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து, காது வலி இருந்தால் காதில் 2 சொட்டு ஊற்ற காதுவலி குணமடையும். இந்த முடக்கத்தான் கீரையை அரைத்து,கர்பிணி பெண்களின் அடிவயிற்றில் பூசி வர, பிரசவம் சுகபிரசவமாக அமையும். மேலும், குழந்தை பெண்களுக்கு இந்த முடக்கத்தான் கீரையை பெற்ற  பெண்களின் அடிவயிற்றில் அரைத்து பூச கருப்பையில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
 
முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து, உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
 
முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய்  அளவு தினமும் உண்டுவர, சொறி, சிரங்கு, கரப்பான், போன்ற தோல் நோய்கள் குணமாகும். மேலும் இந்த கீரையை அரைத்து தோல்களில் பூசியும் வரலாம்.
 
முடக்கத்தான் கீரையை தொடர்ந்து, உண்டு வந்தால் புற்று நோயின் தாக்கம் குறையும். விரைவீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை அரைத்து விதைகளின் மீது பற்றுப்போட விதை வீக்கம் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது கொய்யா இலையில் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா...!!