Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாட உணவில் பச்சை பட்டாணி சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

அன்றாட உணவில் பச்சை பட்டாணி சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!
பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துவது நல்லது.

பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும். ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.
 
பட்டாணியில் கொழுப்பு சத்து என்பது குறைவாக இருக்கிறது. அதே நேரம் அதிக கலோரி கொண்ட உணவாகவும் இருக்கிறது. உடலுக்கு தேவையான சத்து பெற அதிக புரதமும் கொண்டது.
 
உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.
 
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.
 
பச்சை பட்டாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூட்டு வலி வராமல் காக்கிறது. நாள்பட்ட மூட்டு வலியின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் கீல்வாதத்துடன் தொடர்புடைய மூட்டு அழிவின் முன்னேற்றத்தைக் குறைக்க உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சு சளியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகள் !!