Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயற்கையில் கிடைக்கும் மூலிகை பொடிகளும் அதன் பயன்களும்...!

Advertiesment
மூலிகை பொடிகள்
இந்தியாவில் மலைப்பகதிகளில் மூலிகைத் தாவரங்கள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் குறிப்பாக, கிராமப்புறங்களில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகை வகைச் செடிகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெள்ளருக்கு பொடி: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
 
நன்னாரி பொடி: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது.
 
நெருஞ்சில் பொடி: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
 
பிரசவ சாமான் பொடி: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பொடி: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
 
பூலாங்கிழங்கு பொடி: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
 
வசம்பு பொடி: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
 
சோற்று கற்றாலை பொடி: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
 
மருதாணி பொடி: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
 
கருவேலம்பட்டை பொடி: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொற்று நோய்களை குணப்படுத்த உதவும் கீழாநெல்லி