Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் தொழிலதிபரை சுட்டுக் கொன்ற இளைஞர் !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (21:03 IST)
டெல்லியில் உள்ள துவாரகாவில்,  பிரதான சாலையில் , ஒரு இளைஞர் தொழிலதிபரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள துவாரகாவில் இன்று பட்டபகலில்,. ஒரு இளைஞர் தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு, ஒரு தொழிலதிபரை ஓட ஓட சுட்டுக் கொன்றார். பல வாகனங்கள் அந்த சாலையில் நின்றிருந்தன. இருப்பினும் ஒருவரும் அவரை தடுக்க பக்கத்தில் செல்ல முடியவில்லை.
 
இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்  துப்பாக்கியால் சுடப்பட்டு சாலையில் கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு  , மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
அந்தக் கொலைக் குற்றவாளியை போலீஸார் தேடி வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments