Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 16 வயது சிறுமி பலி

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (17:37 IST)
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 16 வயது சிறுமி உள்பட 3 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தெற்கு காஷ்மீர், ரெட்வானி என்ற பகுதியில் ராணுவத்தில் ரோந்து வாகனங்கள் மீது சிலர் கல் வீழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ராணுவத்தினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16வயது சிறுமி உள்பட 3பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
 
இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கலவரம் தொடரும் என்ற காரணத்தினால் அந்த பகுதியில் செல்போன் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த ஜம்மூ - காஷ்மீர் மாநில ஆளுநர் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2016ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட புர்கான் வானி நினைவு தினம் வர உள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments