Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறை.. தீவிரமாகும் பருவமழை..!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (13:12 IST)
கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் மூன்று மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
 கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மீண்டும் மழை குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டையம், பத்தணம்திட்டா ஆகிய மூன்று மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் இன்று முதல் நான்கு நாட்கள் கேரளா முழுவதும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments