Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்: எடியூரப்பா பேட்டி

Mahendran
வெள்ளி, 15 மார்ச் 2024 (11:05 IST)
முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா மீது பாலியல் குற்றச்சாட்டை சிறுமி ஒருவர் கூறிய நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் என் மீது எழுந்து உள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்றதாகவும், அப்போது எடியூரப்பா சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநில போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் உண்மைதானா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edit by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்