Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்னல் சோபியா குரேஷி வீட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்கினார்களா? வதந்தி என விளக்கம்!

Mahendran
புதன், 14 மே 2025 (10:36 IST)
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பதிலாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானும், பாக்-ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்களை  தாக்கியது. இந்த செயல்முறையில், ராணுவத்தில் உள்ள இரண்டு பெண் அதிகாரிகள் முக்கிய பங்காற்றினர்.
 
கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை அதிகாரியான விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த முதலாவது ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு விவரங்களை வெளியிட்டனர். இவர்களின் பங்கேற்பு இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
இந்நிலையில், மத்திய பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா, சோபியா குரேஷியை பயங்கரவாதியின் சகோதரி என தவறாக குறிப்பிட்ட பேச்சு, கடும் எதிர்ப்பை கிளப்பியது. அவரது வாக்கியங்கள் காங்கிரசால் கண்டிக்கப்பட்டது.
 
பின்னர், தனது வார்த்தைகளுக்காக அமைச்சர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதே நேரத்தில், சோபியாவின் வீட்டில் ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக இணையத்தில் பரவிய செய்திக்கு போலீசார் "வதந்தி" என மறுப்பு தெரிவித்தனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments