Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூனியம் எடுப்பதாக சொல்லி பெண்ணின் உடல் முழுவதும் சூடு போட்ட போலி சாமியார்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:43 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மூடநம்பிக்கையால் பெண் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மத்திய வயது பெண் தனது குடும்பத்துக்கு தொடர்ந்து கஷ்டங்களாக வருவதாக சொல்லி அந்த பகுதியில் இருக்கும் பெண் சாமியாரான சந்தோஷி தேவி என்பவரிடம் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக சொல்லிய சந்தோஷி 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மறுநாள் வர சொல்லியுள்ளார்.

மறுநாள் அந்த பெண் சென்ற போது சூனியம் எடுப்பதாக சொல்லி பழுக்க காய்ச்சிய கம்பியால் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். வலியால் அலறிய அந்த பெண் இப்போது மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சைப் பெற்று வருகிறார். போலி சாமியார் என மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments