அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

Siva
திங்கள், 24 நவம்பர் 2025 (14:19 IST)
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது பெண் மருத்துவர் ரோஹினி, அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.
 
பத்மா ராவ் நகரில் தனியாக வசித்து வந்த ரோஹினி, நவம்பர் 22 அன்று கதவை திறக்காததால், அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து சென்றபோது, அவர் சடலமாக காணப்பட்டார்.
 
அவரது வீட்டில் கிடைத்த தற்கொலை குறிப்பில், தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், விசா நிராகரிக்கப்பட்டதை குறித்தும் ரோஹினி எழுதியிருந்தார்.
 
ரோஹினி கிர்கிஸ்தானில் எம்பிபிஎஸ் முடித்த ஒரு புத்திசாலி மாணவி என்றும், அமெரிக்காவில் மருத்துவத் தொழில் தொடங்குவது அவரது நீண்ட நாள் கனவு என்றும் அவரது தாயார் லட்சுமி தெரிவித்தார். விசா மறுக்கப்பட்டதால் அவர் ஆழ்ந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
 
ரோஹினி அதிகப்படியான மாத்திரைகள் அல்லது ஊசி மூலம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

அடுத்த கட்டுரையில்
Show comments