Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளைக்காரரோடு என்னை உறவு கொள்ள வைத்தார் : கணவர் மீது மனைவி பகீர் புகார்

வெள்ளைக்காரரோடு என்னை உறவு கொள்ள வைத்தார் : கணவர் மீது மனைவி பகீர் புகார்
, வியாழன், 16 ஜூன் 2016 (14:02 IST)
தேனிலவு சென்றபோது, தனது கணவர் வெளிநாட்டவர் ஒருவருடன் தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைத்தார் என்று ஒடிஷாவை சேர்ந்த ஒரு பெண் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஒடிஷா மாநிலத்தில் தொழிலதிபராக விளங்குபவர் டிரைலோக்யா மிஸ்ரா. அவருடைய மகன் சப்யசாச்சி மிஸ்ரா. சப்யாச்சியின்  மனைவி லோபமுத்ரா(36), தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது சமீபத்தில் காவல் நிலையத்தில் பரபப்பு புகார் ஒன்றைக் கொடுத்தார்.
 
அந்த புகாரில், திருமணமான நாளில் இருந்தே அவர்கள் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்துபேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
என்னை என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்தனர். அதை நான் எதிர்த்தால், பெரிய பணக்கார குடும்பங்களில் இதுவெல்லாம் சகஜம் என்று கூறினர். 
 
2006ஆம் ஆண்டு தேனிலவுக்கு சென்றபோது, மனைவி மாற்று முறை என்று கூறி, வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் என்னை கட்டாயப்படுத்தி என்னை உறவு கொள்ள வைத்தார்.  வெளிநாட்டுக்காரர் மனைவியுடன் அவர் உறவு கொண்டார். 
 
திருமணத்திற்கு முன்பும் அவர் பல பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டார் என்பது எனக்கு தெரிய வந்தது. அவர் மாறிவிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், திருமணத்திற்கு பின்பும் அவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருகிறார்.
 
இதுபற்றி நான் சண்டை போட்டால், என்னை அடிப்பார். இதற்கு முன் ஒருமுறை நான் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது அவர் திருந்திவிடுவதாக கூறினார். அதனால் அந்த புகாரை வாபஸ் பெற்றேன்” என்று கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடுமலை கவுரவகொலை : 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது