Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணமான நபருடன் தகாத உறவு.. பெண்ணின் ஆடையை கிழித்து மொட்டையடித்த சம்பவம்.. பெரும் அதிர்ச்சி..!

Advertiesment
கர்நாடகா

Siva

, ஞாயிறு, 29 ஜூன் 2025 (10:30 IST)
கர்நாடகாவில் திருமணமான ஒரு நபருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் ஒரு பெண்ணை, கிராம மக்கள் ஒன்றுகூஃபி கொடூரமாகத் தாக்கி, அவரது ஆடையை கிழித்து, வலுக்கட்டாயமாக மொட்டை அடித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த கொடூரச் சம்பவம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் போலீஸில் புகார் அளித்த பின்னரே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 
இந்தத் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் முறைப்படி புகார் அளித்த பின்னரே இது குறித்து வெளியுலகுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களால் அந்த பெண் பாதியளவு ஆடையின்றி, மன உளைச்சலுடன் இருக்கும் வீடியோக்கள் ஆன்லைனில் வேகமாக பரவியதே, அவரது கணவர் புகார் அளிக்க தூண்டப்பட்டதற்குக் காரணம்.
 
திருமணமான நபருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான உறவை திருமணமானவரின் மனைவி, ஒரு பஞ்சாயத்தை ஏற்பாடு செய்து, தனது கணவரையும், அந்த பெண்ணையும் விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். ஆனால் பஞ்சாயத்தின்போது மனைவியும் அவரது உறவினர்களும் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.
 
இதன் விளைவாக ஏற்பட்ட சண்டையில், அந்த பெண்ணின் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், அவரும் அந்த ஆணும் கட்டாயமாக மொட்டை அடிக்கப்பட்டுள்ளனர்.
 
கிராமப் பெரியவர்கள் உடனடியாகத் தலையிட்டு, சண்டையிட்டவர்களைப் பிரித்து, அவர்களுக்கு அறிவுரை கூற முயன்றதாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்று கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார். 
 
இதையடுத்து  கணவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 கொலைகள்! ஜப்பானை உலுக்கிய சைக்கோ கில்லர்! - மரண தண்டனை நிறைவேற்றம்!